மகாராஷ்டிராவைச் சேர்ந்த தி லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை போதுமான மூலதனம் இல்லாத காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று ரத்து செய்தது. இதனால் வங்கி கலைக்கப்படுவதால், வங்கியில் பணம் போட்டுள்ள ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 5 லட்சம் வரையிலான வைப்புத்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, தற்போதைய நிதி நிலையில், வங்கி அதன் தற்போதைய வைப்புத்தொகையை முழுமையாக செலுத்த முடியாது மற்றும் வங்கியைத் தொடர அனுமதித்தால் பொது நலன் மோசமாக பாதிக்கப்படும்.
இதையடுத்து வங்கியில் பணம் போட்டவர்கள் DICGC சட்டம், 1961ன் விதிகளுக்கு உட்பட்டு, டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனிலிருந்து (DICGC) ரூபாய் 5 லட்சம் வரையிலான டெபாசிட் இன்சூரன்ஸ் க்ளெய்ம் தொகையைப் பெறுவதற்கு ஒவ்வொரு டெபாசிட்டருக்கும் உரிமை உண்டு என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இதற்கான செயல்பாடுகளை முடித்து, வங்கிக்கு ஒரு கலைப்பாளரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி தரவுகளின் அடிப்படையில், வங்கியில் பணம் போட்டுள்ளவர்களில் சுமார் 99 சதவீத டெபாசிட்தாரர்கள் தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் DICGC யிடமிருந்து பெற உரிமை பெற்றுள்ளனர்.
மீதமுள்ள ஒரு சதவீதம் பேர் மட்டுமே ரூ.5 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்துள்ள நிலையில், அவர்கள் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தொகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…