செப்டம்பரில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்ந்தது. இதில் முக்கியமாக விலை உயர்ந்தது உணவுப் பொருட்கள் தான். மேலும் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக, சில்லறை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச அளவான 6 சதவீதத்தை விட அதிகமாகவே உள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவு, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக இருந்தது.
முன்னதாக ஆகஸ்டில் 7 சதவீதமாகவும், 2021 செப்டம்பரில் 4.35 சதவீதமாகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் செப்டம்பரில் 8.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், ரிசர்வ் வங்கி, இப்போது, பணவீக்கத்தை 4 சதவீதமாகக் கட்டுப்படுத்தத் தவறியதற்கான காரணங்களை மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். சில்லறை பணவீக்கம் 2-6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…