Share Market Live News: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 326.84 புள்ளிகள் உயர்ந்து 53,234.77 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையான இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகிய இரண்டுமே 0.5% உயர்ந்துள்ளது. அதன் படி, பிஎஸ்இ சென்செக்ஸ் 328 புள்ளிகள் அதிகரித்து 53,067.49 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 99.7 புள்ளிகள் அதிகரித்து, 15,935.05 ஆகவும் காணப்படுகிறது.
இதன் காரணமாக, பல்வேறு நிறுவனங்களான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் உள்ளன. இன்று தொடக்கத்திலேயே பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
மேலும், நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 78.94 காசுகளாக இருந்த நிலையில், பங்குச் சந்தையின் ஏற்றம் காரணமாக இன்று ஒரு டாலருக்கு 79.06 ரூபாயாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…