அரசு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்று வைராகியதுடன் இருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. தமிழக அரசு துறையில் 1083 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது அரசு. அது குறித்த முழு தகவலும் இந்த பதிவில் பாப்போம்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு ஆகிய துறையில் காலியாக இருக்கும் 1,083 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் எந்தெந்த துறைக்கு எவ்ளோ காலி பணியிடங்கள் என்று பார்க்கலாம்.
இளநிலை வரை தொழில் அலுவலர் பதவியில் - 794 பணியிடங்கள்
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் - 236 இடங்கள்
பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர்- 18 இடங்கள்
நகர் ஊரமைப்பு துறை வரைவாளர்(கிரேடு 3) - 10 இடங்கள்
தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்துறை முதலாள்(கிரேடு 2) - 25 பணியிடங்கள் உள்ளன.
நீங்க இந்த தேர்வில் பங்கேற்க விரும்பினால் மார்ச் 4 ஆம் தேதிக்குள் உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 11ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரி செய்துக் கொள்ளலாம். இதற்கான தேர்வு மே 27 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு வேலை சார்ந்து அனைத்து விவரங்களையும் தெரிந்துக்கொள்ள www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.
மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.
மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…