முந்தைய திமுக ஆட்சி காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய 'தமிழ் செம்மொழி பாடல்' பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருணாநிதி குறித்த ஒரு பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வருகின்ற கல்வியாண்டில் 9ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள், பங்களிப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான பாடப்பகுதி இறுதி செய்யப்பட்டு புத்தகங்கள் தற்போது அச்சிடும் பணியில் இருப்பதாகவும் விரைவில் பாடப்புத்தகம் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…