தமிழகத்தில் அரசு விடுமுறைகளோடு அவ்வப்போது உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்களுக்கும் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது.
அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா நாளை மறு தினம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை நேரில் கண்டுகளிக்க தமிழகம் முழுவதும் மட்டும் இல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. பிரதீப் குமார் அவர்கள் திருச்சி மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் அரசு பாதுகாப்பு கருதி அவசரப் பணிகளை கவனிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலங்களை சேர்ந்த குறைந்தபட்ச பணியாளர்கள் பணிபுரிவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் விதமாக வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 13 ஆம் தேதி பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…