Agnipath Scheme: அக்னிபாத் திட்டத்தின் கீழ், விமானப் படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் படி, இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 ஆம் நாள் தொடங்கி மூன்று நாள்களில் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
மத்திய அரசு புதிய ராணுவ ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களில் 30% பேர் 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும்.
எதிர்ப்புகள்
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதனால், பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுபெற்று வருகிறது. மேலும், இளைஞர்களின் கனவு வீணாகி போகும் நிலைமையாக உள்ளது. இதனால், ரயில்களுக்கு தீ வைப்பது போன்ற பல்வேறு விதமான நிலைமைகள் வந்துள்ளன.
கட்டாய விண்ணப்பங்கள்
அதன் படி, அக்னிபாத் திட்டத்தில் இணைவது கட்டாயம் எனவும் மத்திய அரசு கூறப்பட்டுள்ளது. இதில், பல்வேறு வகையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் ஆட்சேர்ப்பு பணிக்கான விண்ணப்பங்களை தொடங்கியுள்ளது. இதற்கு முதற்கட்டமாக, 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இளைஞர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வரவேற்கப்பட்ட விண்ணப்பங்கள்
அதன் படி, இதற்கு முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 24 ஆம் நாள் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. மேலும், இதற்கான விண்ணப்பம் தொடங்கிய மூன்று நாள்களில் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு மேல், இன்னும் இந்த பதவிக்கான விண்ணப்பங்களுக்கு ஏராளக்கானோர் விண்ணப்பிப்பர் எனவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…