ஒவ்வொரு மாவட்டத்திலும், பொது அரசு விடுமுறைகளோடு உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் அந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறையும் விடப்படும். அந்த வகையில், சண்டிகரில் குரு தே பகதூர் ஷாஹிதி திவாஸை விழாவிற்கு அந்த பகுதியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், குரு தே பகதூர் ஷாஹிதி திவாஸை இனி அனைத்து நிறுவனங்களிலும் அனுசரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, இனி சண்டிகர் முழுவதும் அந்தநாளில் பொதுவிடுமுறை விடப்படும் என்று சண்டிகர் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை, அன்று அனைத்து அரசு அலுவலங்கள், அரசு நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொதுவிடுமுறை என அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…