அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவச கல்வி வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கிவருகிறது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கிறது.
இதனிடையே, தமிழகத்தில் செயல்பட்டுவரும் மாதிரி மேல்நிலைப் பள்ளிகள், சீர்மிகு பள்ளிகள் உள்ளிட்ட பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கையின் போது கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்றும், அப்படி நன்கொடை வசூலிப்பது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…