Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு..

Nandhinipriya Ganeshan November 11, 2022 & 09:43 [IST]
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு..Representative Image.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, இன்று நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று நடைபெறுவதாக இருந்த தட்டச்சு தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்