சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் 830 மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து மறுக்கூட்டலுக்கு மாணவர்கள் மே 30ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில் நேற்று முடிவுகள் வெளியாகின.மதிப்பெண் மாற்றம் குறித்து விண்ணப்பித்தவர்கள் பதிவெண் பட்டியல் மட்டும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களில் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுமதிப்பீட்டில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாணவிகளை விட மாணவர்கள் தான் மறுக்கூட்டலில் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…