Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிபெண் விவரம் வெளியீடு: 830 மாணவர்கள் மதிப்பெண்களில் மாற்றம்

Baskaran Updated:
12ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிபெண் விவரம் வெளியீடு: 830 மாணவர்கள் மதிப்பெண்களில் மாற்றம்Representative Image.

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் 830 மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து மறுக்கூட்டலுக்கு மாணவர்கள் மே 30ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில் நேற்று முடிவுகள் வெளியாகின.மதிப்பெண் மாற்றம் குறித்து விண்ணப்பித்தவர்கள் பதிவெண் பட்டியல் மட்டும் www.dge.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களில் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுமதிப்பீட்டில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாணவிகளை விட மாணவர்கள் தான் மறுக்கூட்டலில் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்