Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..? தேர்வு தேதியில் மாற்றம்..

Nandhinipriya Ganeshan Updated:
தமிழகத்தில் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..? தேர்வு தேதியில் மாற்றம்.. Representative Image.

இந்தியாவில் எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2 பேர் இந்த வைரஸ் தொற்றால் இறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதுவும் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படும் இடமாக தமிழகம் முதலில் உள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கவே தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்த நிலையில், ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 17ஆம் தேதியே தேர்வு நடைபெறும் என கல்வி துறை தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் புதுச்சேரியில் இந்த புதிய வைரஸ் தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இன்று முதல் மார்ச் 26ம் தேதி வரை 11 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இந்த நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என விளக்கமளித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்