Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10,11,12ம் வகுப்புகளுக்கு மாலைநேர சிறப்பு வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Saraswathi Updated:
10,11,12ம் வகுப்புகளுக்கு மாலைநேர சிறப்பு வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு Representative Image.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் (சிறப்பு வகுப்புகள்) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 12ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி பாடங்கள் நடத்தப்பட்டுவருகிறது. வெயிலின் தாக்கத்தால் நடப்பாண்டிற்கான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போன நிலையில், சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு மாலை நேர சிறப்புகள் வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, பள்ளி நேரம் முடிவடைந்து, மாலை 5 மணி 5.30 மணி வரை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாலைநேர சிறப்பு வகுப்புகள் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்