தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in -இல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கிடையில், சென்ற வருடம் ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஏழு மாதங்கள் ஆகியும் வெளியாகாத நிலையில், வருகின்ற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…