Latest Update for Students: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா சூல்நிலையின் காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.
அதன் படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31 ஆம் நாள் தேர்வு முடிவடையும் நிலையில் 12 ஆ வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணியை விரைவாக முடிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5,9, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேதிகளில் நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைத்தாள்களை குறிப்பிடப்பட்ட விடைதிருத்தும் மையங்களுக்கு வரும் 28 ஆம் தேதி அனுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
விடைத் தாள்களைத் திருத்துவதற்காகத் தமிழகத்தில் 40 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, சுமார் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…