Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த தேர்வுத் துறை..!

Gowthami Subramani Updated:
தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த தேர்வுத் துறை..!Representative Image.

விடைத்தாள் திருத்தும் பணி குறித்து தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த விடைத் தாள்களை திருத்தும் பணி தமிழகத்தில் கிட்டத்தட்ட 70-க்கும் அதிகமான மையங்களில் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, தேர்வுத்துறை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி தனியார் பள்ளிகள், தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.

மேலும், தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். அதே போல, ஆங்கில வழி வகுப்பெடுக்கக் கூடிய ஆசிரியர்கள், ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நடைமுறையைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்