டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு ரெடியாகி வரும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் பல லட்சம் தேர்வர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தன்னார்வ பயிலும் வட்டங்களில் பயிற்சியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. போட்டித் தேர்வில் முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆசிரியப் பதிவுப் படிவம் என்ற லிங்கில் சென்று, வரும் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து தேர்வானால் ஊக்கத் தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளலாம் என்பதால், பலரும் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…