டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பும் தேர்வர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 30 ஆம் நாள், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை குரூப் 4 தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்தது. இதற்கு, சுமார் 16.2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடந்த நிலையில் இதில் சுமார் 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 30% இட ஒதுக்கீடு மகளிருக்காக வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், புதிய முறையைப் பின்பற்றியே குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
இதில், தேர்வு முடிவுகளுக்கு விவர அட்டவணையை கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில், டிசம்பர் மாதத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 3 உள்ளிட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னரே, தகுதியான விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…