Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தொடர் கனமழையால் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..

Nandhinipriya Ganeshan November 12, 2022 & 10:20 [IST]
தொடர் கனமழையால் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..Representative Image.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் மிதமானது முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம்- புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதனால் தமிழகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, இன்று முதல் அடுத்த சில நாட்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 28 மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், அரியலூர், வேலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, நீலகிரி, திருச்சி, செங்கல்பட்டு, பெரம்பலூர், கரூர், சேலம், தஞ்சாவூர், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பத்தூர், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்