கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
இந்நிலையில், அவர் பேசும்போது, “தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. டாக்டர் ராமதாசும், பழனி பாபாவும் இணைந்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
முஸ்லிம்களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் வன்னியர்களோடு இணைந்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து பெற்றுத் தந்த மருத்துவர் ராமதாஸ் தான்.
மேலும், டாக்டர் ராமதாஸ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்” என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…