விளக்கில் இருந்து பூதம் கிளம்புவது போல் ஒரு வினோத அசௌகரியம் ஒன்று ஆடிகளால் நடந்துள்ளது. இது என்ன புதிய பிரச்சனை மனிதர்கள் தான் விலங்குக்கு பாதகமாக இருக்க கூடும், ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் ஆடுகளால் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆடுகளின் அட்டூழியம்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன் தினமும் 50 க்கு மேற்பட்ட ஆடுகள் சாலையில்ம் அங்கும் இங்குமாக சுற்றி தெரிகிறது. சுவரில் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள், அறிவிப்பு பதாகைகள் போன்றவை சாப்பிட்டு கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பே வந்து படுத்து கொள்கின்றது.
மேலும், அலுவலக படிக்கட்டில் அமர்ந்தபடி ஆடுகள் புலக்கை மற்றும் சிறுநீர் கழிப்பதால் கிராம நிர்வாக அலுவலக பகுதியில் சிறுநீர் வாடை வீசுவதாக அங்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். தினமும் சாலையில் ஆடு மேய்த்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…