Erode latest news : தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன்படி, முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின் அணைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதனையடுத்து, தற்போது முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக மக்களுக்கு அதிக அளவில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் 23,77,315 மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18,09,100 பேர் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16,40,038 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 91% ஆகும். இதனையடுத்து, 13,71,007 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 76% ஆகும்.
இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 80% சிறுவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…