சமீப காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வுக்கு பயந்தும், ஆசிரியர் கண்டித்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீப காலமாக இவர் பள்ளி பாடங்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?
இந்த நிலையில் இன்று வீட்டில் அனைவரும் அவரவர் வேலைக்கு செல்லும் வரை பள்ளிக்கு தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்தவர் வீட்டில் அனைவரும் அவரவர் பணிக்கு கிளம்பியவுடன் தனது துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…