மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அந்தியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆசானூர் முல்லா(48) ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னதம்பிபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடன் இவரது மனைவி காசினா காட்டுன் மற்றும் இரண்டு மகன், தாஸ்லிமா(13) என்ற ஒரு மகள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், தாஸ்லிமா வீட்டில் துப்பட்டா மூலம் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர், சிறுமியை தாஸ்லிமாவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி தாஸ்லிமா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…