சென்னையில் 17 வயது சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள நிலையில், சிறுமியை ஏமாற்றிய காதலன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் டிஎல்எஃப் அருகே ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த 28 வயதான ஆம்புரோஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.
மேலும் சிறுமியை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற ஆம்புரோஸ், சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமி காதலனிடம் கூற, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், அதுவரை இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அதை நம்பிய சிறுமி தனது பெற்றோருக்குத் கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வயிறு பெரிதாகவே அது தொப்பை எனக் கூறி சிறுமி சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போதுதான் சிறுமி கர்ப்பமாக இருந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன பெற்றோர்கள், சரி ஆனது ஆகட்டும் என காதலன் ஆம்பூரோசை தொடர்புகொண்டு, தங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆம்புரோஸ் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் 30ஆம் தேதி அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து சென்னை வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி காதலன் ஆம்புரோசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…