ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த தகவலின் அடிப்படையில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கே.என் பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என தெரியவந்தது. மேலும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, மோட்டாா் சைக்கிளில் வந்த காட்டிலாக்க தெருவை சேர்ந்த கருப்புசாமி என்பவரிடம் சோதனை நடத்திய போது வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளானர்.
மேலும், ஒரேநாளில் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…