ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றில் திறக்கப்பட்டும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கொடிவேரி தடுப்பணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கொடிவேரி அணை சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்துள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொடிவேரி அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் கொடிவேரி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…