மதுரையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பேருந்து மோதியலில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விலங்குடி சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது 2 வயது மகன் பொன்ராம் சம்பவத்தன்று வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இதில் சிறுவன் பொன்ராம் உயிரிழந்து விட்டான்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…