Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பரபரப்பு புகார்!!

Sekar August 25, 2022 & 19:43 [IST]
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பரபரப்பு புகார்!!Representative Image.

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தந்தை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது உரிய நடவடிக்கை எடுக்காமல், பள்ளி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் தந்தை தனது புகாரில் தெரிவித்தார்.
 
இந்த புகார் பின்னர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வரும் போலீசார், குற்றவாளியை கண்டறிய சிறுமியின் முன்பு, அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்