ஈரோடு மாவட்டம் கீழ் பவானி வாய்க்காலில் 45 வயது நபர் ஒருவரின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் தேடிக்கொண்டிருந்தபோது, 7 வயது சிறுவன் ஒருவனின் சடலம் மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் போலீசாருக்கு கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 45 வயது மதிப்புள்ள அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து செல்வதாக தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணிக்காக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கிசடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 7 வயது சிறுவன் ஒருவனின் உடல் மிதந்து வந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுவனின் சடலம் குறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தூர் போலீசார், அடையாளம் தெரியாத 7 வயது சிறுவன் யார்? இது கொலையா? யாரேனும் கொன்று வாய்க்காலில் வீசினார்களா? அல்லது நீரில் மூழ்கி சிறுவன் பலியானானா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…