Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூங்கும் போது தாயைக் கொன்ற 14 வயது சிறுவன்... வெளியான பகீர் தகவல்...

Gowthami Subramani October 13, 2022 & 12:20 [IST]
தூங்கும் போது தாயைக் கொன்ற 14 வயது சிறுவன்... வெளியான பகீர் தகவல்...Representative Image.

சத்தியமங்கலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், தூங்கும் போது கல்லைத் தூக்கிப் போட்டு தாயைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. இவரது மகன் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் வயது 14. இந்த சிறுவன் சரியாக படிக்காததால், விடுதியில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டனர். இதனைத் தெரிந்து கொண்ட மாணவன், தான் விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என தாய் யுவராணியிடம் கூறியுள்ளார். ஆனால், நீ விடுதியில் தங்கியிருந்தால் தான் சரியாகப் படிப்பாய் என யுவராணி கூறியுள்ளார்.

மேலும், வீட்டில் இருந்தால் உனக்கு படிப்பில் கவனம் போகவில்லை எனவும் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. விடுதிக்குப் போக மாட்டேன் என சிறுவன் எவ்வளவு முறை சொல்லியும் தாய் யுவராணி மறுத்து விட்டார். சிறுவனை விடுதியில் தங்கியிருந்து தான் இனிமேல் படிக்க வேண்டும். அப்போது தான் நீ ஒழுங்காக படிப்பாய் என சொல்லிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த அந்த சிறுவன், தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் ஹலோ பிளாக் கல்லை எடுத்து வந்து அடித்துள்ளான். இதில் படுகாயம் அடைந்த யுவராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்