மக்களுக்கு பால் மற்றும் இதர பால் பொருட்களை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இருப்பது ஆவின். இதன் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நிலைத்தன்மையுடன் இருப்பதால் மக்களிடன் ஆவின் பாலுக்கென்று தனி மரியாதையே உள்ளது. இந்நிலையில், மதுரையில் வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட் ஒன்றில், 'ஈ' இறந்து மிதந்த நிலையில் வெளியான,'வீடியோ'வால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை ஆவின் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., - நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் மதுரையில் 40 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
பல்கலைக்கு அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் வாங்கிய பெண் நுகர்வோர், பாக்கெட்டிற்குள், கருப்பு நிறமாக ஏதோ மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார். பின்னர் அதனை உற்றுப்பார்த்து பொது "ஈ" மிதந்து கொண்டு இருந்தது. உடனடியாக அதனை டிப்போவில் திருப்பி கொடுத்து இருக்கிறார்.
இத்தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் அதிகாரிகள், அந்த பாக்கெட்டை பெற்று, 'சம்பந்தப்பட்ட பாக்கெட் குறித்த வீடியோ, போட்டோ இருந்தால் வெளியிட வேண்டாம்' என, டெப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…