Erode latest news : ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நவகாளியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர், நவகாளியம்மன், கருப்ப ராயன் சுவாமிகளுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நவகாளியம்மன் கோவில்
இந்நிலையில் அந்த கிராம மக்கள் நவகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால், திருக்கோவிலின் கோபுரம் புதிதாக கட்டப்பட்டு மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
பிரமாண்ட சிலை
மேலும், தமிழகத்தில் முதன் முறையாக இக்கோவிலில் 10 கைகளுடன் 71 அடி உயரத்தில் பிரமாண்ட நவகாளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
கும்பாபிஷேகம்
இந்நிலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கோவில் நிர்வாகத்தினர், “தமிழகத்திலேயே முதன் முறையாக மிக பிரம்மாண்டமான நவகாளியம்மன் சிலை 10 கைகளுடன் 71 அடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அம்மனை வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால், நவகாளியம்மன் கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…