Erode latest news : ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்த 57 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன்.
ஈரோடு மாவட்டத்தில் விதிமுறை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை போலீசார் தீவிரமாக வாகன சோதனை செய்து வருகிறார்கள். மேலும் மது விலக்கு போலீசாரும் வாகன சோதனை செய்து விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் மீது வழ்க்குப்பதுவி செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆகியோரின் உத்தரவின்படி மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அணைத்து வாகனங்களும் ஏலம் விடப்பட்டன.
அதன்படி, ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் மது விலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு, கலால் உதவி ஆணையர், அரசு பணிமனை உதவி பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் கடந்த சில நாட்களாகப் பறிமுதல் செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 51 இரு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 57 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஏலத்தில் 57 வாகனங்களை ஏலம் எடுத்தனர். இதன் மூலம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 786 ருபாய் வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, 2022 ம் ஆண்டில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட 654 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 96 லட்சத்து 64 ஆயிரத்து 786 ருபாய் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…