கோபிச்செட்டிபாளையம் அருகே திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன நிலையில், ஐடியில் வேலை பார்க்கும் பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே தோட்டக்காட்டூரில் இந்து என்ற பெண் உடலை பிளாஸ்டிக் கவரில் மூடி டேப் ஒட்டிக்கொண்டு, ஹீலியம் வாயுவை பலூன் மூலம் ஏற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்து என்ற இந்த பெண் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு கோவையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கோபி பகுதியை சேர்ந்த விஷ்ணு பாரதி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
விஷ்ணு பாரதி சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்துவும் திருமணத்திற்கு பிறகு சென்னையில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத பாட்டியை பார்க்க தோட்டக்காட்டூர் வந்து இந்து சில நாட்கள் இங்கேயே தங்கியுள்ளார்.
அப்போது வீட்டிலேயே, தனது அறையில் பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு, ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…