Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - நாகமலை புதுக்கோட்டையில் பரபரப்பு

Saraswathi Updated:
கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - நாகமலை புதுக்கோட்டையில் பரபரப்புRepresentative Image.

மதுரை அருகே தனியார் மதுபானக் கடை முன்பு கை,கால்கள் கட்டப்பட்டு, உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காலங்கரை பகுதியில் தனியார் மதுபான கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கடை முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண், கை கால்கள் கட்டப்பட்டு முகத்தில் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து கை, கால்கள் கட்டப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்