ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி திமுக ஏ.ஜி.வெங்கடாசலம் என்பவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக அந்தியூரில் இருந்து தனது கார் மூலம் ஈரோடு ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இரவு 10 மணி அளவில் தொட்டிபாளையத்தில் வந்த ஏ.ஜி.வெங்கடாசலம் MLA கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் MLA படுகாயம் அடைந்தார். மேலும் அவரது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்ப்பட்டது.
இதனையடுத்து, MLA ஏ.ஜி.வெங்கடாசலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…