ஈரோடு பஸ் நிலையத்தில் தினந்தோறும் 600க்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். கடந்த சில நாட்களாக சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் முறையாக சைக்கிள் நிறுத்தத்தை பயன்படுத்தாமல் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
இந்நிலையில், இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களை கள்ள சாவி போட்டு திருடி செல்கின்றனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் தினந்தோறும் புகார்கள் குவிந்து வந்துள்ளது.
இதனையடுத்து, ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் காவலர்கள் திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் முறையில்லாமல் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இவ்வாறு இனி விதியை மீறக்கூடாது என காவல்துறையினர் அறிவுறை வழங்கியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…