Erode flash news : ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்களின் குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அதன்படி, 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி விளங்குகிறது..
இந்நிலையில், பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள 2,47,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதன்படி, இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் பவானிசாகர் அணைக்கு 907 கனஅடி வீதம் வினாடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், குடிநீருக்காக 100 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 80 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…