Erode latest news : ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஏமம்பாளையத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற கூலி தொழிலாளியின் மனைவி நாகேஸ்வரி இவர்களுக்கு திருமணம் நடந்து சில வருடங்கள் கடந்தும் குழந்தைகள் பிறக்கவில்லை.
இந்நிலையில், நாகேஸ்வரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் வேதனை அடைந்து வந்தார். இந்நிலையில், நாகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து விட்டார்.
இதனையடுத்து, இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானியில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், அவரது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து பவானி காவல்துரையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…