தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 25-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 25-ம் தேதி மாலை 5 மணியளவில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் பின்பு பெருமாநல்லூர், குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், மொடச்சூர், கோபி, நஞ்சகவுண்டன் பாளையம் வழியாக டி. என். பாளையம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டிக்கு வருவதாக அவரது பயண விபரம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனையடுத்து, ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
இதனையடுத்து, 26-ம் தேதி காலை காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பி சோலார் அருகே உள்ள புதிய பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனையடுத்து, அங்கிருந்து பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் வழியாக கோவைக்கு செல்கிறார்.
மேலும், இது தொடர்பான அணைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…