சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை காய்ச்சலை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக சிறுமி தொடர்ந்து உடல்நல குறைவால் அவதிப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு மேலும் சிலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…