சென்னையில் இனி நீங்கள் மது அருந்தாவிட்டாலும், மது அருந்திய டிரைவருடன் பயணித்தால் உங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதி குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர் மீதும், மோட்டார் வாகன சட்டப்படி, ரூ.1,000 முதல் ரூ.10,000 வர அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அறிமுகம் இல்லாத ஓட்டுனர் உடன் பயணிக்கும் போது இந்த விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…