கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 382ஆவது சென்னை தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆண்டுதோறும் சென்னை மாநகரம் உருவான தினம் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக சென்னை தின கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு 282வது சென்னை தினம் கலைக்கட்டியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, சென்னை பெசன்ட் நகரில் சென்னை தினம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
சென்னை தினத்தை முன்னிட்டு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…