சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த மாணவன் ஒருவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் ஒடிசாவைச் சேர்ந்த சுப்ரான்ஷீ சேகர் என்ற மாணவர், நான்காம் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் பட்டப்படிப்பை படித்து வந்தார். இவர் தெவூரி கோட்டூர்புரத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
இறுதி ஆண்டு தேர்வில், இவர் ஐந்து பேப்பர்களில் தேர்ச்சி பெறாததன் காரணமாக ஸ்கிப்பிங் கயிறு மூலம் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…