Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் படையெடுத்த கொரோனா..! முகக் கவம் அணிவதற்கான அறிவிப்பை வெளியிட்ட அரசு..!

Gowthami Subramani September 16, 2022 & 10:15 [IST]
மீண்டும் படையெடுத்த கொரோனா..! முகக் கவம் அணிவதற்கான அறிவிப்பை வெளியிட்ட அரசு..!Representative Image.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுவதால், மீண்டும் முகக் கவசம் அணிவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அலை குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்ஃபுளூயன்சா என்ற மர்மக்காய்ச்சலும் பரவி வருகிறது. இந்த மர்மக் காய்ச்சலின் அறிகுறிகளாக சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா மீண்டும் படையெடுத்து வருவதால், அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, சென்னை மாநகராட்சியில் மீண்டும் கொரோனா பரவல், மர்மக் காய்ச்சல் என பல்வேறு கட்ட வரிசைகளில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இதில் அதிகம், பள்ளி செல்லும் குழந்தைகளே பாதிக்கப்படுவதாகச் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளிகளிய கடைபிடிக்கவும் கூறியுள்ளது. வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்