Chennai News Today : கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையின் 15 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு கூறிய சென்னை மற்றும் செங்கல்பட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 15 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் சென்னையில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…