சென்னையில் சாலை கடக்கவிருந்த பெண் தனது 6 மாத கைக்குழந்தையுடன் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகம்பாத்தில் உள்ள என்.எஸ்.கே பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி என்பவர். இவர், அண்ணாநகரில் ஸ்டிக்கர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்குழலி. இவர்களுக்கு குழல் ஸ்ரீ என்ற 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
இந்நிலையில், சஞ்சீவ் காந்தி தனது மூத்த மகள், மனைவி, மற்றும் 6 மாத குழந்தையுடன் ஆயுதபூஜை கொண்டாட முடிவு செய்தார். இதற்கு, கணபதி ஹோமம் நடத்த ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை இவர்கள் அண்ணா வளைவு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இதில், சஞ்சீவ் காந்தி முதலில் தனது மூத்த மகளுடன் சாலையைக் கடந்து சென்று விட்டார். ஆனால், பூங்குழலி 6 மாத கைக்குழந்தையுடன் கடந்து செல்ல முயன்ற போது, அதிவேகமாக மோட்டார் சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டார்.
அவர் மோதிய மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் அவரது தோழியுடன் வந்துள்ளார். இந்த விபத்தில், அவர்களும் இருந்த இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சஞ்சீவ் காந்தி அருகில் சென்று பார்த்த போது மனைவி பூங்குழலி ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை காப்பாற்ற அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது கண் எதிரே, மனைவி மற்றும் 6 மாத குழந்தை பலியானதைத் தொடர்ந்து சஞ்சீவ் காந்தி கதறி அழுதார்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், நிகல் என்ற அந்த வாலிபர் போதையில் இருந்ததாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நிகலை அதிவேகமாக ஓட்டுவதற்கு அவருடன் வந்த அவர் தோழியான கிருத்திகா அவரை உற்சாகப்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…