தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா கடந்த மாதம் 23 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் சென்னை தியாகராய நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீர பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு நுரையீரலில் நீர் தேங்கியதாக கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக சென்னை அமஞ்சிக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
தகுந்த கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டதால் அவருக்கு உடல்நலம் சீராகி நேற்று மலை 5 மணியளவில் நீலாங்கரையில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பினார். இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நன்கு ஒய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா அவர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து அவரின் உடலநலத்தை விசாரித்துள்ளனர். இந்த சந்திப்பின் பொழுது கவிஞர் வைரமுத்து மற்றும் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…