சென்னை பெரம்பூர் பணிமனையை சேர்ந்த 47 வயதான செல்வகுமார் பேருந்து நடத்துனர் ஆவார். இவர் எப்பையும் போல நேற்று வேலைக்கு சென்றுள்ளார். நேற்று காலை பிராட்வேயில் இருந்து பெரியார் நகர் நோக்கி செல்லும் தடம் எண் 42 என்ற பேருந்தில் தன்னுடைய பணியை செய்துள்ளார். பேருந்தை கணேசபுரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிவிட்டு புறப்பட்டுள்ளனர்.
அப்போது புளியந்தோப்பு கன்னிகா புரத்தை சேர்ந்த அனிதா என்பவர் ஓடி வந்து பேருந்தில் எறியுள்ளார். இவர் அந்த பேருந்தில் வேலை செய்யும் அலுவகத்திற்கு செல்வாராம். அவர் பேருந்து கிளம்பியதும் ஓடி வந்து ஏறியதால் நடத்துனர் அவரை திட்டியுள்ளார். இவரும் பதிலுக்கு அவரை திட்ட ரெண்டு பேத்துக்கும் வாக்குவாதம் அதிகரித்து கடைசியில் கைகலப்பில் வந்து முடிந்தது.
இந்த சம்பவம் குறித்து அனிதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். அதனால் ரோந்து பணியில் வந்தவர்கள் இவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மக்கள் அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ இப்போது அதிகமாக பரவி வைரலாகி விட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…